Monday, June 1, 2015

அம்பலம் ஏறும் அம்மணம்




பகிர்ந்து வாழ
சொல்லித் தந்தது
முகநூல் !

பகிர்ந்து வாழக்
கற்றுக் கொண்டான்
மனிதன்!

அடுத்தவன்
அவலத்தை
அசிங்கத்தை
அம்மணத்தை!

கைபேசி தூக்கி
காட்சிகள்
கைது செய்து
கணப்பொழுதில்
பதிவேற்றி
விருப்புகளையும்
பகிர்வுகளையும்  
கணக்கிட்டு
தன் பிரதாபம்
மெச்சிக் கொள்கையில் !

மறந்து
விடுகிறான்
மனிதம் தொலைத்த
தன்
அம்மணத்தை
அம்பலம்
ஏற்றிக் கொண்ட
அசிங்கத்தை!

-தமிழினியன்-

1 comment:

  1. மனிதம் தொலைத்த
    தன்
    அம்மணத்தை

    அருமையான வரிகள் தோழரே

    ReplyDelete