பண்போடு பணிவெடுத்து
அறிவோடு அடக்கமுற்று
தன்னிலை தாழ்த்துவோரை
மேன்னிலை தேடி வரும்!
ஆணவம் தலைக்கெடுத்து
ஞானச் செருக்கிலெவர்
வானம் தொட் டெகிறினும்
ஊனமுற் றுள்ளமுழல்வர் !
மமதை மதமெடுத்து
மண்ணில் மற்றவரை
மதியாதொழுகும் பாங்கால்
மிதியுற்றழிவார் அவர்!
உயர வளரும் மூங்கில்
தாழ்வளைந்தன்னைத் தாழ்த்தி
உயர்ந்த புல்லாய் உலகில்
நிமிர்ந்து நிற்றல் போல
உயர்வு உன்னில் உயர
பணிவு தன்னில் மூழ்கி
உயர்வாய் உலகத்துள்ளம்
குனிவு இன்றி நிமிர!
-தமிழினியன் பிரபாகரன்-
No comments:
Post a Comment