Sunday, June 28, 2015

நமது நிஜம்!?

நிஜங்களின்
முகங்களை
நிஜமாய்
யார் காட்டியது?

பொய்களைப்
போர்த்தியே
மெய்களை மூடித்
திரிகிறோம்!

செய்வதொன்றாக
சொல்வது
வேறாக !

நீயென்ன ?
நானுமோர்
அரசியல்வாதி
தான்!

நாலு பக்க
சுவருக்குள்
நூறு வீத
மறைவுக்குள்

நாம் செய்வதும்
நமக்குள் நாம்
சொல்வதும் தான்
நமது நிஜம் !

பொய் களைந்து
துகிலுரித்து
நம் நிர்வாண
நிஜங்களை
காட்டுகின்ற
வீதத்தில் தான்
நாம்
நல்லவராய்
கெட்டவராய்
சமூகத்தில்
வாழ்கின்றோம் !

நிஜம் தானே
நான்
சொல்வது!?


-தமிழினியன் பிரபாகரன் -

1 comment:

  1. அழகு..

    www.kolusu.in தளத்தில் எழுத வாருங்கள்....

    ReplyDelete