ஆச்சரிய ஆசிரியம்!
சுயம்புவாய்
சுயம் கற்று
சுயமாய்க் கற்று
அமீபாவான்று ஆறறிவு பெற்று
அவனியிலென்றோ
எழுந்த போது
ஆசிரியமங்கே ஆச்சரியமாயொரு தொண்டாய்த்தானே
தொடங்கியிருக்கும்.!?
தெரிந்ததைப் பகிர்ந்து
அறிந்ததைச் சொல்லி அடுத்தவரறிவும்
அடுத்த படிக்கெடுத்து
அவனியை மெல்ல
அறிவுக்கிரகமாக்கிய
ஆசிரியமன்று
அறியாமல் வந்த முதல் தொழில் தானே!
சுயநலமன்று
சுயோமோச்சியிருந்தால்
நானும் கூட இன்னும்
ஜடமொன்றாய் எங்கோ பரிணாமமற்ற
ஓரறிவுயிர் தானே !
-தமிழினியன் பிரபாகரன்-