மரணம் யாருக்கும்
பொதுவானது!
வரும் தருணம்
எதுவென்று
தெரியாதது!
மறு கணம் கூட
இங்கு உறுதி
இல்லாதது!
வயதென்று
வரம்பென்று
பார்க்காதது!
அரசன்
ஆண்டியெனத்
பிரிக்காதது!
ஓடி ஒழிந்தாலும்
விடாதது!
பின்னெதற்கிந்த
ஆணவ ஆட்டம்!?
ஆசைகள் பின்னோட்டம்!?
இருப்பதைப் பகிர்ந்து
சக உயிரினை மதித்து
சகஜமாய் வாழ எது இங்கே தடுக்கிறது?
சிரஞ்சீவிகள் இருந்தால்
சொல்லுங்களேன்!


