Sunday, February 8, 2026

 ஏறுங்கள்!

ஏறுவதில் தப்பில்லை!


ஏற்றிவிடவும் கொஞ்சம் நேரமொதுக்கி ஏறுங்கள்!


தூக்கி விடவும் கொஞ்சம்

கைகொடுத்து உதவுங்கள்.


ஏறிப்பெற்ற கடதாசி உங்களிடம் மட்டுமிருப்பதிலில்லை பெருமை!


நீங்கள் ஏற்றிவிட்டவர்கள் எத்தனை பேரிடமுள்ளது என்பதில் இருக்கிறது பெருமை!


ஏறவந்தவர்களின் நேரம் களவெடுத்து

ஏறிப்போனபின் நீங்கள்!


கீழே ஏறமுடியாமல் ஏங்கி நிற்பவர்களின்

ஏக்கமுங்களை

சாபமாகித் தொடும் கவனம்.!


அதன்பின் ஏறியதிலும்

ஏறிப்பெற்திலும்

பயனின்றிப் போகும்!


அதனால் நீங்களும் ஏறிக்கொண்டு

கைகொடுத்து ஏற்றிக்கொண்டும்

 

வாங்குங்கள் பட்டத்தை.


ஆத்மதிருப்தியாயது

ஆகாயமேறிப் பறக்கும்

சுகமே தனி!


-தமிழினியன் பிரபாகரன்-

Friday, February 6, 2026

 முகமலர்ந்த சிரிப்பதனுள் 

அகம் முறைத்த 

சினம் புதைத்து 

புஜமணைத்து

புறமுதுகில் 

குத்துகின்ற

நிஜமில்லா

மனிதக்

குழுவில்,

புழுவாக நான்

நெளிகின்றேன்

வழியின்றிச் சிரிப்பணிந்து

வலிதாங்கி

வலிதாக்கி

மனமதனை.

Thursday, January 22, 2026

 மரணம் யாருக்கும் 

பொதுவானது!

வரும் தருணம்

எதுவென்று

தெரியாதது!

மறு கணம் கூட

இங்கு உறுதி

இல்லாதது!

வயதென்று 

வரம்பென்று

பார்க்காதது!

அரசன் 

ஆண்டியெனத்

பிரிக்காதது!

ஓடி ஒழிந்தாலும்

விடாதது!

பின்னெதற்கிந்த

ஆணவ ஆட்டம்!?

ஆசைகள் பின்னோட்டம்!?

இருப்பதைப் பகிர்ந்து

சக உயிரினை மதித்து

சகஜமாய் வாழ எது இங்கே தடுக்கிறது?

சிரஞ்சீவிகள் இருந்தால்

சொல்லுங்களேன்!

Sunday, January 11, 2026

இது புதுசு!நீ புதுசு!


எல்லோரும் போலவே நீயிருந்தால் 

எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?

வித்தியாசப்படு! 


ஒத்திவைத்தவுன் எத்தனத்தில் 

சொத்தியாகுமுன்னிலக்கு! 

இன்றே செய்! 


முயலாமல் முடியாது 

முன்சென்று நீ வெல்ல! 

முயற்சி செய்!


தோல்விக்குத் துவண்டால் நீ 

கேள்வியின்றித் தொடரும் தோல்வி! 

எழுந்துநில் !


கட்டம் கட்டி முட்டி நின்றால் 

ஒட்டு முறிந்து விலகுமுறவு!

விட்டுக்கொடு! 


மறக்காத் துரோகம் உனையென்றும் 

உள்ளிருந்துருக்கும்! 

மறந்துவிடு! 


மன்னித்தல் உன்னை 

மனிதரில் மாண்புறுத்தும் !

மன்னித்து விடு!


செல்லும் செல்வத்தோடு 

செல்லாதிருக்கவுன் புகழ் !

தானம் செய்!


-தமிழினியன் பிரபாகரன்-

Saturday, July 11, 2015

மனைவி என்பவள்!

மாற்றுத் தாய் அவள்
மனைவி என்பவள்!
ஏற்றி எமை நெஞ்சில்
போற்றி வைப்பவள்!

வம்சம் வாங்கி
வடித்துக் கொடுப்பவள்!
அம்சமாயதை
செதுக்கித் தருபவள்!

மூத்த குழந்தையாய்
தத்தை எடுத்தெனை
கத்தை கத்தயாய்
முத்தம் பொழிபவள் !

உணர்வை உள்ளுக்குள்
இறங்கிப் பார்த்தவள்
உணர்ந்து தேவையை
சிறந்து செய்பவள்!

ஓய்ந்து அவளை
பார்க்க ஆசை தான்!
சாய்த்து மடியில்
தூங்க ஆசை தான் !

சாய்ந்து அவள்
தூங்கும் அழகிலும்
ஓயும் வீட்டின்
அமைதி கொல்லுமே!

தாய்க்கு மட்டுமா நம்
தீராக் கடன்!?
வாய்த்த மனைவிக்கும் நாம்
ஆறாக் கடன் !

-தமிழினியன் பிரபாகரன்-

Sunday, June 28, 2015

நமது நிஜம்!?

நிஜங்களின்
முகங்களை
நிஜமாய்
யார் காட்டியது?

பொய்களைப்
போர்த்தியே
மெய்களை மூடித்
திரிகிறோம்!

செய்வதொன்றாக
சொல்வது
வேறாக !

நீயென்ன ?
நானுமோர்
அரசியல்வாதி
தான்!

நாலு பக்க
சுவருக்குள்
நூறு வீத
மறைவுக்குள்

நாம் செய்வதும்
நமக்குள் நாம்
சொல்வதும் தான்
நமது நிஜம் !

பொய் களைந்து
துகிலுரித்து
நம் நிர்வாண
நிஜங்களை
காட்டுகின்ற
வீதத்தில் தான்
நாம்
நல்லவராய்
கெட்டவராய்
சமூகத்தில்
வாழ்கின்றோம் !

நிஜம் தானே
நான்
சொல்வது!?


-தமிழினியன் பிரபாகரன் -