கொத்திக் குதறியுன்
குணத்தைக்
கொன்று
கதறக் கதறவுன்
கண்ணியம்
சிதைத்து
உதற முடியாக்
கறையுன்னில்
தந்து
சிதறடித்துக்
கலைத்துன்
நிம்மதி
உன்னைச் சீண்டிய
குற்றம்
மறைத்து
உன்னை
மட்டுமே சுட்டிக்
காட்டி
குற்றவாளியாய்க்
கூண்டில்
ஏற்றும்
கூவிச்
சொல்லியும்
கேட்பாரிலருன்
நியாயம்
செத்து நீ
ஊமையாவாய்!
ஆதலால் நீ
கோபம்
கொல்வாய்!
-தமிழினியன் பிரபாகரன்-
"ரௌத்திரம் பழகு"
ReplyDelete