Sunday, May 17, 2015

பரமனே என் பராபரமே!

நிர்ச்சலன
மோனத்தில்
நிசப்தத்தின்
சப்தம் கேட்டேன் !

பிரபஞ்ச
பூதமென்னும்
பிரமாண்ட
ரூபம் கண்டேன்!

எல்லை இல்லா
அகண்ட வெளியில்
கோடியிலோர்
அணுத்துகள்
நான்!

இது தான்
இத்தனை தான்
நான்
என்றுணர்ந்த
போது
என்னுள்
நான்
தொலைந்து போக !

எதுவுமில்லா
வெற்றிடத்தில்
எல்லாமாய்
உன்னைக் கண்டேன்!

பரமனே!
என் பராபரமே!!

-தமிழினியன்-

No comments:

Post a Comment