நிர்ச்சலன
மோனத்தில்
நிசப்தத்தின்
சப்தம் கேட்டேன் !
பிரபஞ்ச
பூதமென்னும்
பிரமாண்ட
ரூபம் கண்டேன்!
எல்லை இல்லா
அகண்ட வெளியில்
கோடியிலோர்
அணுத்துகள்
நான்!
இது தான்
இத்தனை தான்
நான்
என்றுணர்ந்த
போது
என்னுள்
நான்
தொலைந்து போக !
எதுவுமில்லா
வெற்றிடத்தில்
எல்லாமாய்
உன்னைக் கண்டேன்!
பரமனே!
என் பராபரமே!!
-தமிழினியன்-
No comments:
Post a Comment