விடிந்து முடியும்
பொழுதொவ்வொன்றும்
முன்னகர்த்துமுன்
முடிவை நோக்கி
ஓரடி!
ஆனால்
ஏதோ என்றும்
நின்று நிலைத்து
வாழும் நினைப்பில்
நீ!
விஞ்ஞான மமதையில்
மெய்ஞானம் துழைத்து
கடவுளைத் தோண்டி
நீ துகள் தேடினாலும்
ரத்துச் செய்ய
முடியாத சாசனம்
உன் மரணம்!
அதை மறந்து
தொலைத்ததால்
இங்கு
மனிதம் தொலைந்தது !
மழை வறண்ட
பூமியாய்
பாளம் வெடித்து
ஏங்குது மனசு
எனக்குத் துணையாய்
ஒரு மனிதனைத்
தேடி !
மனிதம் நிறைந்த
ஒரு மனிதனைத் தேடி !
-தமிழினியன்-
அருமையான வரிகள்.....
ReplyDeleteநன்றி அன்பரே!
Delete