Friday, May 15, 2015

மூட நம்பிக்கை தான்!!

அகாலத்தில்
அகாலமாக்கப் பட்டவர்கள்
தமை
அகாலமாக்கியவர்களை
ஆவியாக வந்து
அழித்தொழிப்பார்கள்!
என்பது
மூடநம்பிக்கை தான்!

ஆனால்

சொந்த மண்ணில்
அகமிழந்து
சுயமிழந்து
ஓட ஓட
விரட்டப்பட்டு
செந்தழழில்
வெந்தழிந்து
குருதிச்சகதியில்
உழுதழிக்கப்பட்ட
நம்
உறவுகளை
அழித்தொழித்த
கயவர்களின்
எக்காள
முழக்கங்கள்
கேட்கும் போது

மூர்க்கத் தனமாக
ஏங்குகிறேன்

அது
உண்மையாகக்
கூடாதா!
 
-தமிழினியன்-

2 comments: