நாத்திகனல்ல நானிதைச் சொல்ல
ஆத்திரமின்றி யோசித்துப் பாரீர்!
சாத்திரசடங்கு சம்பிரதாயங்கள்
போர்த்தி வளர்த்த பொய்யுடலங்கள் !
மூச்சடங்கியது வீழ்ந்திட்ட பின்னும்
ஆச்சார சீலங்கள் ஆயிரங் காணும் !
குலச்சார உபசாரம் கொடுத்ததைக்கொண்டு
அபச்சாரமாகவேன் குப்பையாய் கொழுத்துவான்?
மண்ணுக்கும் புழுவிற்கும் மக்கியது போகவா
கண்ணுக்கும் கருத்துக்கும் காத்ததை வளர்த்தது?
மன்னனிறைவனின் மாண்புறு படைப்பினில்
எண்ணயிங்கெதுவும் கழிவில்லை கண்டீர் !
மறைந்தும் மறையா வாழ்வென்னும் அறமே !
மறைந்துயிர் போன உறையின் தானம் !
குறையோ பிழையோ இதிலொன்றுமில்லை –பாவக்
கறைகள் கழுவி
இறைசேருமான்மா!
மண்ணாய்க் காற்றாய் மறைந்து போன நமை
எண்ணாதிறுதியில் மறந்து போவதை
கண்ணாய் கலமாய் தானம் செய்து நாம்
எண்ணா ஆயுளும் நீண்டு வாழ்வமே!
-தமிழினியன்-
No comments:
Post a Comment