Friday, May 15, 2015

சூரியனா உன் விழிகள்!

எதில் விழுந்தேன்!?
ஏன் விழுந்தேன்!?
புரியவில்லை!

என் வழியால்
போனவனை
உன் விழியா
வீழ்த்தியது!?

குந்திக்கு
சூல் கொடுத்த
சூரியனா
உன் விழிகள்!?

கற்பிழந்து
போன் என்
உள்ளம்
காதல் கருவினைச்
சுமக்கிறதே!

கருக்கலைக்க
நான்
பாவியல்ல
சம்மதத்
தாலி தந்து
என் காதல்
கருவிற்கோர்
அங்கீகாரம் தா!

கை கோர்த்து
இருவரும்
சேர்ந்தே
பிரசவிப்போம்!

இல்லை என்
கருவோடு
நான்
கல்லறைக்குள்
மூடிக் கொள்கிறேன்!

சமூகச் சாபத்துக்கு
சத்தியமாய்
நான்
ஆளாக மாட்டேன்!

-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்

1 comment: