Sunday, May 17, 2015

சற்று ஏதாவது செய்!

உதிரும்
நிமிடத் துளிகள்
உனைக் கடந்து
போகும் !

உலகிலோர்
உயர்திணையாய்
உதித்து நீ
என்ன செய்தாய்?

ஏதோ பிறந்தோம்
வாழ்ந்தோம்
செத்தோம்
என்று போக
நீ என்னவோர்
அஹ்ரினைப் பூச்சியா?


உன்னுயிர்
உதிர்ந்தழிந்து
உலர்ந்து
போகுமுன்
உலகம்
உள்ள வரை
உன்நாமம்
உயிர் வாழ
உயர்திணையாய்
உதித்து நீ
என்ன செய்தாய்?

எண்ணூறு கோடியில்
எப்படி உன்
பெயர் பதிப்பாய்?

புத்தன்
இயேசு
காந்தி
அன்னை தெரேசா
நெல்சன் மண்டேலா
ஏன்
ஹிட்லரும்
இடியமீனும் கூட
இன்னும்
பெயர் வாழ்கையில்

நீ யாராய்
பெயர் பதிப்பாய் ?

சுற்றும் பூமியோர்
முற்றுப் புள்ளியில்
வெடித்துச் சிதறும் வரை
துடித்துக் கொண்டிருக்க
உன் பெயர்
சற்று ஏதாவது செய்!

-தமிழினியன்-

1 comment:

  1. சுற்றும் பூமியோர்
    முற்றுப் புள்ளியில்
    வெடித்துச் சிதறும் வரை
    துடித்துக் கொண்டிருக்க
    உன் பெயர்
    சற்று ஏதாவது செய்!

    அபாரமான வரிகள்

    ReplyDelete