எனக்குள் ஏனிந்த
கேள்விகள் நூறு
எதற்கு என்னுளிவ்வையங்கள்
நூறு?
எங்கே இறைவன் என்பதின் தேடல்?
எதில் போய் முடியுமென்
இறைவனின் சாடல் ?
அவனியென்னவனுக்கு
விளையாட்டுத் திடலா?-இது
அன்பே உரு வானவன் செயலா?
அப்பாவிகள் கோடியைக்
கொன்றா
கொடும்பாவிகள் நூறினைக்
கேட்பான்?
நின்று கொல்லும் தெய்வம்
என்றால்
என்று வரை ஒத்திவைப்பு ?
அன்றே கொன்று புதைத்து விட்டால்
நன்றேயவனி வாழ்ந்திடாதா?
ஒத்திவைத்து ஒத்துழைத்து
பாவம் தனில்
ஒத்திசைந்து சாகும் மட்டும் பாவிகளாய்
எத்திசையும் தீட்டுப் பட வாழ்ந்தழிக்க
மத்தி செய்யும் மாண்பு தா
னென்ன?
அன்றே கொன்றவனியினை
அன்றன்றே சுத்தி செய்து
அப்பாவிகள்
நன்றே வாழும் அழகான பூமி
தர
இன்றே கொல் பாவிகளை !
-தமிழினியன்-
No comments:
Post a Comment