Friday, May 15, 2015

என்னவள் ஹைகூவுகிறாள்!

கருஞ்சாயம் கரைத்து
நிலம் பாயும் நீர்வீழ்ச்சி
உன் கூந்தல்!

கயல் மீன்கள் கரை வந்து
சாயல் பார்க்கும்
உன் கண்கள்!

மூன்றாம் பிறை முன் வந்து
மண்டியிட்டுக் கேட்கும்
உன் நெற்றி!

கடலைக்கூடும் கதிரவனால்
நாணுகின்ற கீழ்வானம்
உன் கன்னம்!


அன்னம் பின் தொடர்ந்து
அடி வைத்துப் பழகும்
உன் நடை!

முல்லைக் கொடி வளைந்து
தன் நளினம் பார்க்கும்
உன் இடை!


-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்

1 comment: