Friday, May 15, 2015

மனிதன் நன்றி கெட்டவன்!

பெற்ற தாயை
கற்பழிக்கும்
குற்ற உணர்வு
சற்றும் இன்றி!

அவள்
கருவறையை
கழிப்பறையாக்கி
களிப்படையும்
மகன் தான்
மனிதன்!

அவன்
அறிவின் உச்சம்
வளர வளர
அறிவியல் எச்சம்
பெருகுதிங்கே!

மண்ணும்
விண்ணும்
வீசும் காற்றும்
அவனால் இங்கு
கற்பிழந்து
பங்கமாகிப்
பொங்கியெழுந்து
புரட்டிப் போட்டும்

அழிவின் அச்சம்
துச்சமும் இன்றி
மீண்டும் மீண்டும்
அறிவியல் எச்சம்
துப்புகின்றான்!

அவன்
எச்சங்களால்
மிச்சமின்றி
கற்பிழந்து
களையிழந்து
வளமிளந்து
தனை
வாழ வைக்கும்
வரமிழந்த
பூமித்தாயை
தலை முழுகித்
தபபியோட
புதிய பூமிப்பந்து
தேடுகிறான்

மனிதன்
நன்றி கெட்டவன்!

செவ்வாயையும்
சேதமாக்கப்
போகிறான்!


-தமிழினியன்-

No comments:

Post a Comment