Wednesday, May 13, 2015

யார் ஊனம்!?


இடறி விழுந்தேன்
காலிருந்தும்!
சிரித்துக் கடந்தனர்
கண்ணிருந்தும்!
பதறி வந்தான்
மனமிருந்து!
தோள் கொடுத்தான்
கரமிருந்து!

நிமிர்ந்து பார்த்தேன்
அவனுக்கோர்
காலில்லை!!

யார் ஊனம்!!!
?


-தமிழினியன்-

2 comments: